கபவாத சுரம்

குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத சுரமாகும் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்டும்.

மருந்து

நிலவேம்பு – 15 கிராம்
சீந்தில் தண்டு – 15 கிராம்
சிற்றரத்தை – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்
பூனைக்காஞ்சொறி – 15 கிராம்
கடுகு ரோகிணி – 15 கிராம்
பற்பாடகம் – 15 கிராம்
கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
கண்டுபரங்கி – 15 கிராம்

இவற்றை எல்லாம் போடி செய்து சுத்த நீரில் போட்டு கால் லிட்டராகும் படி சுண்டைக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும். தினசரி 3 வேளை கொடுக்க வேண்டும்.

கபவாத சுரத்தில் நெஞ்சில் அதிகமாக சளி கட்டி குழந்தை அவதிப்பட்டால் ஆளிவிதையை களி கிண்டி சுடச்சுட துணியில் தடவி மார்பில் போட்டு வைக்கலாம்.

Show Buttons
Hide Buttons