இருமல் குறைய
மிளகுடன், பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மிளகுடன், பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குறையும்.
புதினா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல் குறையும்.
ஒரு டம்ளர் பால் எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் கலந்து, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து சூடுபடுத்த...
கரிசலாங்கண்ணி இலைச்சாறை, எருமைத்தயிரில் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு குறையும்.
திராட்சை பழத்தை பிழிந்து ஒரு டம்ளர் சாறு எடுத்து 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் குறையும்.
தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெண்டைக்காய் விதைகளை பார்லி கஞ்சி போல் வேகைவத்து 3 நாட்கள் 6 வேளை வீதம் பருக சிறுநீர் எரிச்சல் குறையும்.