பால் போலக் கழிச்சல்

குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும்.

மருந்து

பெருந்தும்பை இலை – 30 கிராம்
பிரண்டை இலை – 30 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 15 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
கோரோசனை – 5 கிராம்

முதலில் பெருந்தும்பை இலையையும், பிரண்டை இலையையும், துளசி சாறு விட்டு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்றையும் சேர்த்துப் பொடி செய்யவும். மூலிகைச்சாறு ஒரு அவுன்சு எடுத்து 3 கிராம் எடை பொடி சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். மூன்று வேளை மருந்திலேயே குணமாகி விடும்.

 

 

 

Show Buttons
Hide Buttons