கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்
தேவையான பொருள்கள்:
- வெள்ளை மிளகு = 50 கிராம்
- கடுகு = 25 கிராம்
- வால் மிளகு = 100 கிராம்
- சீரகம் = 25 கிராம்
- மிளகு = 150 கிராம்
செய்முறை:
- வெள்ளை மிளகையும், வால் மிளகையும் மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
- கடுகை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீரை விட்டு கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து 50 மி.லி நெய்யை விட்டு வெடிக்க விட்டு எடுத்து கொள்ளவும்.
- சீரகத்தை மண் பாத்திரத்தில் போட்டு இளஞ்சூடாக்கி கொள்ளவும். மிளகை மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் உரலில் போட்டு நன்கு இடித்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
- இந்த சூரணத்தை தேவைக்கேற்ப எடுத்து சுடு சோற்றில் கலந்து சாப்பிட்டு வரவும். ஒரு நாளைக்கு ஒரு முறையாக 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.