இரைப்பூச்சி

குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும் இருக்கும். அடி வயிறு திரண்டு கட்டி போல் இருக்கும். சில சமயம் வயிற்ரோட்டமும் உண்டாகும்.

மருந்து 1

பிரண்டைத் தண்டு – 50 கிராம்
பேய் பீர்க்கு வேர் – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
புரச விதை – 50 கிராம்

ஒன்று சேர்த்து தூள் செய்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க வேண்டும்.

பத்தியம் : உப்பு, புளி, கடுகு தள்ளுபடி

மருந்து 2

கழற்சிஇலைச்சாறு – 6 அவுன்சு
பாகலிலைச்சாறு – 6 அவுன்சு
சிற்றாமணக்கு எண்ணெய் – 12 அவுன்சு
சுக்கு – 10 கிராம்
வசம்பு – 10 கிராம்
பூண்டு – 10 கிராம்

இவற்றை ஒன்று சேர்த்து போடி செய்து எண்ணெய், சாறுகளுடன் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலையில் (வெறும் வயிற்றில் )கொடுக்க வேண்டும்.

இதில் கிருமிகள் வெளிப்படவில்லையானால் மறுவாரத்தில் திரும்ப மூன்று நாளைக்கு கொடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons