சிறுநீரகக் கோளாறுகள் குணமாக
சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.
கண்டங்கத்திரி இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து 2 கரண்டி வீதம் காலை, மாலை உட்கொள்ள வேண்டும்.
வல்லாரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு தயிருடன் கலந்து காலையில் சாப்பிடவும்.
இளம் தென்னை மட்டையை இடித்து பிழிந்த நீரை காலையில் குடித்து வந்தால் நீர்சுருக்கு தீரும்.
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
சந்தனக்கட்டையை பாலில் உரைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பாதை ரணம் தீரும்.
துளசி விதை, அரச விதைகளை அரைத்து காய வைத்து சிறு உருண்டைகளாக்கி சாப்பிட்டு வந்தால் கண்சூடு தீரும்.
சிறுதேள் கொடுக்கு இலையுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல், தலைக்கு தேய்த்து குளித்து வர குணமாகும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து துணியில் கட்டி நுகர தலைபாரம், மூக்கடைப்பு குணமாகும்.