காட்டுக் கரணை, கறிக் கரணை இரண்டையும் தோல் நீக்கி ஈர்க்கு கனத்தில் சிறுதுண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். வெள்ளைப்பூண்டு இந்துப்பு நீங்கலாக மற்ற மருந்துச் சரக்குகளை நிழலில் நன்கு உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும்.
வெள்ளைப் பூண்டை பசும் பாலில் அவித்து நிழலில் உலர்த்த வேண்டும். எல்லா மருந்துச் சரக்குகளையும் மீண்டும் உரலில் போட்டு இடித்து வடிகட்டி அதன் பின் இந்துப்பை இடித்துப் போட்டு 72 மணி நேரம் காற்றுப் புகாமல் வைத்திருந்து மருந்தைப் பத்திரப்படுத்தவேண்டும்
.காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் 6 கிராம் தூளுடன் 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து பிசைந்து மருந்தை உட் கொண்டு சிறிது பசும் பால் அல்லது வெந்நீர் குடிக்கவேண்டும். இதுபோல் மாலை 6 மணிக்கும் மருந்துண்ணவேண்டும். 40 நாட்கள் மருந்தை சாப்பிட வேண்டும்.