வயிற்றுப் பொறுமல் குறைய

வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். சிற்றாமணக்கு எண்ணெயுடன் வெள்ளாட்டுப் பாலை கலந்து அதில் மூலிகைப் பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பாலில் கலந்து காலை, மாலைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொறுமல் குறையும்.

Show Buttons
Hide Buttons