பித்த மாந்தம்

குழந்தைகளுக்கு சுரம் அடிப்பதுடன் சில சமயம் வியர்க்கும். குரல் கம்மி அழும். வயிற்ரோட்டமும், மயக்கமும் காணும். உடல் பஞ்சடையும்.

மருந்து

வசம்பு – 20 கிராம்
பெருங்காயம் – 20 கிராம்
வேம்பு வேர் – 20 கிராம்
கொன்றை வேர் – 20 கிராம்
வெள்ளைப்பூண்டு – 20 கிராம்
நாரத்தை வேர் – 20 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
மணத்தக்காளி
சிற்றாமணக்கு எண்ணெய்

இவற்றை மணத்தக்காளிச் சாறு விட்டு அரைத்து ஒரு லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயில் கலக்கி காய்ச்சி வடித்து அரை முதல் ஒரு தேக்கரண்டி கொடுத்து வரலாம். மூன்று முதல் ஆறுவேளை மருந்திலேயே குணமாகிவிடும்.

உப்பு, புளி தள்ளி பத்தியம்.

Show Buttons
Hide Buttons