பித்தக் கணை

குழந்தைக்குக் கணைரோகக் குறிகளுடன் மஞ்சளை கரைத்ததுபோல வயிற்றுபோக்கு ஏற்படும். நாக்கு, கடவாய் புண்பட்டிருக்கும். சரீரம் முழுவதும் நெருப்புச் சுட்டது போல எரியும். மயங்கி சோர்ந்திருக்கும்.

மருந்து

உசிலம் பட்டை – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
துளசி வேர் – 15 கிராம்
வில்வ வேர் – 15 கிராம்
வெங்காயம் – 15 கிராம்

ஒன்று சேர்த்துப் பொடி செய்து அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை, இரவு மூன்று வேளை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.உடம்பிலும் பூசிவரக் குணமாகும்..

 

Show Buttons
Hide Buttons