சுழி மாந்தம்

குழந்தைக்கு சுரம் மிதமாகவே இருக்கும். முழங்காலுக்கு கீழே குளிர்ந்திருக்கும். குமட்டல், வாந்தி உண்டாகும். உடல் வீக்கங்கண்டு, பெருமூச்சோடு, இரைப்பு வரும். மூச்சு விடும் போது விலாவின் ஒரு புறமும், சுழித்துப் பள்ளமாகும். தூக்கமிலாமல் அழும். பாலும் குடிக்காது.

மருந்து

மாசிப்பத்திரி – 15 கிராம்
பற்பாடகம் – 15 கிராம்
நாயுருவி – 15 கிராம்
முக்காவேளை – 15 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
சுக்கு – 10 கிராம்

இவற்றை ஒரு மண்சட்டியில் போட்டு வறுத்து அத்துடன்

வசம்பு – 10 கிராம்
மாசிக்காய் – 10 கிராம்
வெட்டிவேர் – 10 கிராம்
கோரைக்கிழங்கு – 10 கிராம்
பறங்கிப்பட்டை – 10 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
கடுகுரோகிணி – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
தான்றிக்காய் – 10 கிராம்
சங்கன் வேர் – 10 கிராம்

இவற்றைப்  பொடி செய்து போட்டு 2 லிட்டர் சுத்த நீர் விட்டுக் கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும். வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுத்து வர வேண்டும்.

உப்பு , புளி தள்ளுபடி பத்தியம்.

 

 

Show Buttons
Hide Buttons