வாதம் குறைய மருந்து

தேவையான பொருட்கள்:

  1. பூண்டு = 15 கிராம்
  2. மிளகு = 15 கிராம்
  3. கழற்சிக்காய் = 60 கிராம்
  4. சிற்றாமணக்கு = 30கிராம்
  5. இந்துப்பு = குன்றி மணி எடை
  6. பால்.

செய்முறை:

  • பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும். மிளகை பசும் பாலில் ஊற வைக்கவும். கழற்சிக் காயைக் கழுவித் துடைத்து அம்மியில் வைத்து ஓடு சிதறாமல் அரைத்து பின்பு பூண்டையும், மிளகையும் வைத்து நன்றாக அரைத்து, மெழுகு பதத்தில் வழித்துக் கொள்ளவும்.
  • சிற்றாமணக்கு எண்ணெய்யை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி அரைத்துள்ள மருந்துச் சரக்குகளை அதில் போட்டு மரக் கரண்டியால் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.மருந்துள்ள பாத்திரத்தின் வாயை துணியால் மூடி 1 மணி நேரம் வெயிலில் வைத்துப் பத்திரப்படுத்தவும்

உபயோகிக்கும் முறை:

  • மருந்துண்ணப் போகும் முன்னால் முழுதும் பாலும் சோறும் மட்டும் மூன்று வேளைகள் உண்ணலாம்.
  • காலை உணவுக்கு ஒரு மணி முன் மருந்தை 6 பாகங்களாக்கி ஒரு பாகத்தை உண்ணவும். மாலை 9 மணிக்கு ஒரு முறை 3 நாட்கள் மட்டும்.  மருந்துண்ணும் நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள உணவுப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.

காலை உணவு:

  •  மிளகு பொங்கல், வெந்நீர்.

பகல் உணவு:

  • பசும்பாலும் சோறும்.

இரவு உணவு:

  • கோதுமை உப்புமா அல்லது பிரட், பசும்பால் அல்லது வெந்நீர் ஆகியவைகளை சாப்பிட வேண்டும்.
  • வெந்நீரில் குளிக்கவேண்டும்.

 

 

Show Buttons
Hide Buttons