செயற்கை கூந்தல் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் சவுரி முடி எனப்படும் செயற்கை கூந்தலை முறையாக பராமரிக்க வேண்டும். சவுரி முடியை வாங்கியவுடன் பயன்படுத்தி விடாமல் தக்கவாறு சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும்.சவுரி முடியை ஒருபோதும் சோப்புப் போட்டு சுத்தம் செய்யகூடாது. சிகைக்காய் தூள் அல்லது கடலை மாவைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பூந்திக் கொட்டையை நீரில் ஊர வைத்தும் சவுரி முடியை அலசலாம்.