முடக்கத்தான் வேரை ஒரு டம்ளர் பாலுடன் காய்ச்சி ஆற வைக்கவும். ஒரு வெள்ளைப் பூண்டை எடுத்து அதில் பாதியளவு அம்மியில் வைத்து அரைத்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும். →
அரை டம்ளர் வெந்நீருடன் ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளைப் பூண்டின் சாற்றைக் கலக்கவும். அதனுடன் இரண்டு சிட்டிகை உப்பைச் சேர்த்து கலக்கிய நீரை அருந்த வேண்டும். இதைக் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். சோறு உண்ணக்கூடாது. நீராகாரம் குடிக்கவும். →
வேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு சம அளவு எடுத்து மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிட வேண்டும்.3 மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு நீங்கி கர்ப்பம் தரிக்கும். →
சுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில் விட காது மந்தம் சரியாகும். →